ஞானத்தை தேடி
உனது ஆதியும் அறியேன் அந்தமும் அறியேன்
நீயின்றி துயரமில்லை நீயின்றி மகிழ்ச்சியில்லை
நீயின்றி சுற்றம் இல்லை நீயின்றி தனிமையில்லை
நீயின்றி நட்பில்லை நீயின்றி பகையில்லை
நீயின்றி ஆசை இல்லை நீயின்றி துறவில்லை
நீயின்றி மதமும் இல்லை நீயின்றி குணமும் இல்லை
நீயின்றி யாரும் இல்லை நீயின்றி யானும் இல்லை
நீயின்றி எனது இல்லை நீயின்றி பிறிது இல்லை
நீயின்றி இவ்வுலகில்லை நீஇன்றேல் எதுவும் இல்லை
ஏ... மனமே, உன்னால் அனைத்தும் எழுவதால்
நீ இல்லாமையே சிவத்தை அறிதல் காண் !!!!!!
லதா கணேசன்

No comments:
Post a Comment